மட்டக்களப்பில் ஆயுள் கைதி ஆனந்தசுதாகரனுக்கு பொதுமன்னிப்பு வழங்கக் கோரி கையெழுத்து வேட்டை

சிவம்

ஆயுள் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் கிளிநொச்சியைச் சேர்ந்த சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரனுக்கு பொதுமன்னிப்பு வழங்கக் கோரி கையெழுத்து சேகரிக்கும் நிகழ்வு இன்று (23) மட்டக்களப்பு காந்திப் பூங்காவினுள் நடைபெற்றது.

2008 ஆம் ஆண்டு ஆரசியல் கைதியாக கைது செய்யப்பட்டு மகசின் சிறையில் ஆயள் சிறைத் தண்டனை அனுபவித்துவரும் இரு பிள்ளைகளின் தந்தையை மனிதாபிமான அடிப்படையில் பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட இளைஞர்கள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் அருட்கலாநிதி ஜோசப் பொன்னையா உள்ளிட்ட மதத் தலைவர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு ஜனாதிபதிக்கு அனுப்பவுள்ள மகஜரில் கையெழுத்திட்டனர்.

ஆனந்தசுதாகரன் கடந்த 15.03.2018 வியாழக்கிழமை தனது மனைவியின் மரணச் சடங்கில் கலந்து கொண்டு சிறைச்சாலை வாகனத்தில் ஏறும்போது தனது மகள் சங்கீதா அவருடன் வாகனத்தில் ஏறியமை குறிப்பிடத்தக்கது.