வெள்ள அனர்த்த பிரதேசத்திலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு வள்ளங்கள்

திடீர் வெள்ள அனர்த்தம் ஏற்படும் கிராம உத்தியோகஸ்த்தர் பிரிவுகளில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு வள்ளங்கள் மற்றும் எஞ்ஜின் உள்ளிட்டவை வழங்கப்படவுள்ளன.

இதற்கான வேலைத்திட்டத்தை பொலிஸ் மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சு ஆரம்பித்துள்ளது.

இதற்கமைவாக இந்த பகுதிகளில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் தலைமையில் இந்த பொருட்கள் வழங்கப்படவுள்ளன.