மட்டக்களப்பில் வாள் வெட்டு ஒருவர் படுகாயம்

மட்டக்களப்பு ,குமாரபுரம் பகுதியில் இடம்பெற்ற குழு ஒன்றின் வாள்வெட்டுக்கு இலக்காகிய ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்று இந்தச் சம்பவத்தில் குமாரபுரம் பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய சுரேந்திரன் என்பவரே பாதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குமாரபுரம் பகுதியில் அன்றையத்தினம் மாலை 5.30 மணியளவில் சைக்கிளில் சென்றுக்கொண்டிருந்த போது, வீதியில் வழிமறித்த ஒரு குழுவினர், அவரை வாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இதன்போது படுகாயமடைந்தத அவரை, அயலவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

படுகாயமடைந்தவரின்   தம்பிக்கும்  வாள்வெட்டுக் குழுவினருக்கும் இடையில் ஏற்பட்ட பகையே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெறுவதற்கு காரணமென, பொலிசாரின் விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.