இன்று நள்ளிரவு முதல் வைபர் இயங்கும்

பொதுமக்கள் எதிர்கொண்டுள்ள அசௌகரியத்தை கருத்திற் கொண்டு  தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டிருந்த வைபர் சமூக வலைத்தளத்தின் மீதான தடையை இன்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு முதல் நீக்கிக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

எனினும் பேஸ்புக், வட்ஸ்அப் உள்ளிட்ட ஏனைய சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை எதிர்வரும் நாட்களில் நீக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகப்புத்தகம், வைபர், வட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு பிரவேசிப்பதை இடைநிறுத்துவதற்கு தொலைத்தொடர்பு ஒழுங்குறுத்தல் ஆணைக்குழு கடந்த 7 ஆம் திகதி தீர்மானம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.