(சிவம்)
மட்டக்களப்பு கோட்டைமுனை புன்னையம்பதி அருள்மிகு மஹா மாரியம்மன் ஆலய வருடாந்த மஹோற்சம் இன்று புதன்கிழமை (21) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
காலையில் ஆரம்பமான மூலஸ்தான பூஜையுடன் கூடிய கிரியைகளைத் தொடர்ந்து ஆலயத்தில் புதிதாக நிர்மாணம் செய்யப்பட்ட கொடித்தம்பத்தில் நண்பகல் 12.00 மணிக்கு கொடியேற்றப்பட்டு அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்றன.
கொடியேற்றக் கிரியைகளை ஆலய பிரதம குரு சிவப்பிரம்ம ஸ்ரீ சரவணன் குருக்கள் சகிதம் உதவிக் குருமார்கள் நிறைவேற்றினர்.
வருடாந்த மஹோற்றசவத்தின் பஞ்சரதோற்சவம் எதிர்வரும் வியாழக்கிழமை (29) தீர்த்தோற்சவம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (30) இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு கோட்டைமுனை புன்னையம்பதி அருள்மிகு மஹா மாரியம்மன் ஆலய வருடாந்த மஹோற்சம் இன்று புதன்கிழமை (21) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
காலையில் ஆரம்பமான மூலஸ்தான பூஜையுடன் கூடிய கிரியைகளைத் தொடர்ந்து ஆலயத்தில் புதிதாக நிர்மாணம் செய்யப்பட்ட கொடித்தம்பத்தில் நண்பகல் 12.00 மணிக்கு கொடியேற்றப்பட்டு அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்றன.
கொடியேற்றக் கிரியைகளை ஆலய பிரதம குரு சிவப்பிரம்ம ஸ்ரீ சரவணன் குருக்கள் சகிதம் உதவிக் குருமார்கள் நிறைவேற்றினர்.
வருடாந்த மஹோற்றசவத்தின் பஞ்சரதோற்சவம் எதிர்வரும் வியாழக்கிழமை (29) தீர்த்தோற்சவம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (30) இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.