பொத்துவில் மெதடிஸ்த தமிழ் மகாவித்தியாலய இல்ல விளையாட்டு போட்டி

(சஞ்சயன்)

திருக்கோவில் வலயத்திற்குட்பட்ட பொத்துவில் மெதடிஸ்த தமிழ் மகாவித்தியாலயத்தின் இல்ல விளையாட்டு போட்டி பாடசாலையின் அதிபர் தலைமையில், அண்மையில் இடம்பெற்றது.

திருக்கோயில் வலய கல்விப் பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம் பிரதம அதிதியாகவும் திருக்கோயில் வலய உதவிக்கல்விப் பணிப்பாளர் எம்.சபேஸ்குமார், ஆரம்ப பிரிவு உதவிக் கல்விப் பணிப்பாளர் பீ.பரமதயாளன், உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் எச்.நைரூஸ்கான் ஆகியோர் கெளரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.

போட்டியில் முதலிடத்தினை வள்ளுவர் இல்லமும் இரண்டாமிடத்தினை நாவலரும் மூன்றாமிடத்தினை விபுலானந்தர் இல்லமும் இதன்போது சுவீகரித்துக்கொண்டனர்.