சந்தேகத்தில் மனைவியை தாக்கி காயப்படுத்திய கணவன் விளக்கமறியலில்

(எப்.முபாரக் )
 திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சந்தேகத்தில் மனைவியை தாக்கி காயப்படுத்திய நபரை இம்மாதம் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் எம்.எச்.எம்.ஹம்ஸா  (19) உத்தரவிட்டார்.                சாம்பல்தீவு,திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.         
       

 குறித்த சந்தேக நபரின் மனைவி வேறு ஒரு ஆணுடன் தொடர்புகளை பேணி வருவதாகவும்,அந்நபர் கணவன் இல்லாத சந்தர்பத்தில் வீட்டுக்கு வந்து செல்வதாகவும் அறிந்ததையடுத்து மனைவி தடியாலும்,கையாலும் மூர்க்கத்தனமாக தாக்கி முகத்திலும் உடம்பிலும் காயங்களை ஏற்படுத்தியுள்ளதாக சந்தேக நபருக்கெதிராக மேற்கொண்ட முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபரான கணவனை ஞாயிற்றுக்கிழமை (18) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

மனைவி திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதோடு,சந்தேக நபரை பொலிஸார் திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.