சமூக வலைத்தளங்களின் தடை இன்னும் சிறிது நேரத்தில் நீக்கப்படும்

சமூக வலைத்தளங்கள் சில தினங்களாக முடக்கப்பட்டு வந்துள்ளதையடுத்து, இன்னும் சிறிது நேரத்தில் அவற்றிற்கானத் தடை நீக்கப்படும், என சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

இன்று (12) மொனராகலையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டபோது, கண்டி நிலவரங்கள் குறித்து உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.