மட்டக்களப்பில் வாய்சுகாதார நடைபவனி

உலக வாய்ச்சுகாதார தினத்தினை  முன்னிட்டு மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் அலுவலகத்தின் பல்வைத்திய பிரிவினரின் ஏற்பாட்டில் வாய்ச்சுகாதார விழிப்புணர்வு ஊர்வலம் செவ்வாய்க்கிழமை   இடம்பெற்றது.

"வாய் நலம் கருத்தில் கொள்க - தேகநலம் பெருக்கி கொள்ள"

எனும் தொனிப்பொருளின் கீழ் இவ்வருட வாய்ச்சுகாதார தினம்  அனுஸ்டிக்கப்படுகின்றது.
 மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து ஆரம்பமான நடைபனி மட்டக்களப்பு காந்தி பூங்காவரை சென்று அங்கு நடைபெற்ற சிறிய ஒன்றுகூடலுடன் நிறைவடைந்தது.

இதில் கல்வியல் கல்லூரி பயிலுனர்கள் , பொது சுகாதார பரிசோதக பயிலுனர்கள் , பிராந்திய சுகாதார பணிப்பாளர் அலுவலக உத்தியோகஸ்தர்கள் மற்றும் மாகாண சுகாதார பயிற்சி நிலைய ஊழியர்களும் கலந்து சிறப்பித்தனர்