செங்கலடியில் 18 வயது இளைஞனிடமிருந்து 800 போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா கைப்பற்றப்பட்டது


மட்டக்களப்பில் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சோதனையில், 18 வயது இளைஞனிடமிருந்து போதைக்காக பயன்படுத்தப்படும் 800 மாத்திரைகள் மற்றும் 5 கிராம் கஞ்சா என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

மட்டக்கப்பிலிருந்து வாழைச்சேனை நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியொன்றை, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) செங்கலடிச் சந்தியில் வைத்து வழி மறித்து திடீர் சோதனைக்குட்படுத்திய போதே குறித்த இளைஞன் கைதுசெய்யப்பட்டார்.

கைதுசெய்யப்பட்ட குறித்த இளைஞன் வாழைச்சேனை அஸ்ஹர் பாடசாலை வீதியை அண்டி வாழ்பவர் என தெரிவித்துள்ள பொலிஸார், அவர் குறித்த மேலதிக தகவல்கள் எதனையும் வெளியிடவில்லை.

குறித்த இளைஞனிடம் தொடர்ந்து விசாரணைகளில் ஈடுபட்டுள்ள பொலிஸார், குறித்த போதைப் பொருள் கொள்வனவு, விற்பனை மற்றும் நுகர்வு வலைப்பின்னலைப் பற்றிய விவரங்களைச் சேகரிப்பதில் ஈடுபட்டுள்ளனர்.