கடற்கரையோர சட்டவிரோத கட்டமைப்புக்களை அகற்ற நடவடிக்கை



கரையோர பாதுகாப்பு சட்டமூலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் சட்டவிரோத கட்டமைப்புக்களை அகற்றும் பணிகள் தற்சமயம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.


இந்த சட்டமூலத்திற்கு அமைவாக , அனுமதி பத்திரம் பெறாமல் சட்டவிரோத நிர்மாணங்களையும் கட்டமைப்புக்களையும் ஏற்படுத்தியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.