லண்டன் லூசியம் சிவன் கோவிலில் சித்திரை புதுவருட பூசைகள் நேற்று மூன்று நேரமும் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது . இதில் சுமார் இரண்டாயிரம் பக்தர்கள் கலந்துகொண்டனர்
இவ் ஆலயமும் இதனுடைய அறங்காவலர்களும் பல்வேறு கல்வி பணிகளை பல வருடங்களாக கிழக்கு மாகாணத்தில் முன்னெடுத்து வருகின்றனர் .
இப் பண்ணிகாக இவ் ஆலயமும் இதனுடைய அறங்காவலர்கள் நால்வரும் வருடம் ஒன்றிற்கு ஒரு கோடி ரூபாக்கு மேற்ப்பட்ட நிதியை வழங்கி வருகின்றனர் .
லண்டன் லூசியம் சிவன் ஆலயம் - 24 லட்சம் நிதி பங்களிப்பு
அறங்காவலர்கள் நால்வர்கள் - 80 லட்சம் நிதி பங்களிப்பு
லண்டன் சிவன் கோவில் மற்றும் அறங்காவலர்களால் கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படும் கல்வி மற்றும் ஏனைய சமூக பணிகள்
* செட்டிபாளையம் சிவன் மகளீர் இல்லம்
- வருடம் ஒன்றிற்கு 16 லட்சம் ரூபா
இல்லத்திலிருந்து ஏழு மாணவிகள் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகி உயர் கல்வியை கற்கின்றனர்
* பொருளாதார வசதி குறைந்த உயர் தர மாணவர்களுக்கான உதவிகள் கடந்து ஐந்து வருடங்களாக இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது ,
25 மாணவர்களுக்காக வருடத்திற்கு 30லட்சம் ரூபா செலவழிக்கப்படுகின்றது .
கடந்த மூன்று வருடங்களில் இதனூடாக மருத்துவ துறைக்கு ஒரு மாணவியும் , பொறியியல் துறைக்கு நான்கு மாணவர்களும் , சட்டத்துறைக்கு ஒருவரும் , ஏனைய துறைகளில் ஏழு மாணவர்களும் பல்கலைக்கழகங்களில் கல்வியை தொடர்கின்றனர்
56 மாணவர்கள் ( மருத்துவம் - 10 , பொறியியல் 25 , சட்டம் 14 , ஏனையதுறை 7 )
இவர்களது கற்கை நெறி முடியும் வரை மாதாந்த கொடுப்பனவாக 5000 - 8000 வரை வழங்கப்படுகின்றது
பின்தங்கிய கஷ்ட பிரதேசங்களில் சாதாரண தர மாண்வர்களுக்கான பிரத்தியோக வகுப்பு நிலையங்கள் .
இதற்கு வருடம் ஒன்றிற்கு 36 இலட்சம் ரூபா நிதி உதவி வழங்கப்படுகிறது.
பின்தங்கிய கஷ்ட பிரதேசங்களில் சாதாரண தர மாண்வர்களுக்கான பிரத்தியோக வகுப்பு நிலையங்கள் .
கல்வி நிலையங்கள்
- ஈச்சிலம்பற்று ( திருகோணமலை )
- இலங்கைத்துறை ( திருகோணமலை )
- தாண்டியடி ( திருக்கோவில் - அம்பாறை )
- வாகரை பால்சேனை ( மட்டக்களப்பு )
- மண்டூர் சங்கர்புரம் (மட்டக்களப்பு )
- தும்பங்கேணி (மட்டக்களப்பு )
- பாலையடிவேட்டை (மட்டக்களப்பு )
இதன் மூலம் 900 மாணவர்கள் பயனடைகிறார்கள் இதற்காக வருடம் ஒன்றிற்கு 28 லட்சம் ரூபா செலவழிக்கப்படுகின்றது .