மட்டக்களப்பு மாநகர சபை அமர்வில் தியாக தீபம் அன்னை பூபதிக்கு அஞ்சலி


மட்டக்களப்பு மாநகரசபையின் 02வதும், மாநகர முதல்வர் தலைமையிலான முதலாவதுமான அமர்வு இன்று மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவான் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாநகர சபை உறுப்பினர் வி.தவராஜா அவர்களின் வேண்கோளுக்கிணங்க சபையினரின் ஏகோபித்த சம்மதத்துடன் தியாக தீபம் அன்னை பூபதி அவர்களின் 30வது ஆண்டு நினைவாக 03 நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு சபை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாகும்.