புளியடிக்குடா புனித செபஸ்தியாரின் திருச்சொருப பவனியும் ஆசீர்வாத திருப்பலியும்


(சிவம்)

மட்டக்களப்பு புளியடிக்குடா புனித செபஸ்தியார் தேவாலய வருடாந்த திருவிழாவையொட்டி திருச்சொருப பவனியுடன் கூடிய ஆசீர்வாதமளிக்கும் திருப்பலி இன்று காலை (22) இடம்பெற்றது.

அலங்கரிக்கப்பட்ட புனித செபஸ்தியாரைத் தாங்கிய திருச்சொரூபப் பவனி நேற்று (21) மாலை ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி நகரின் பிரதான வீதிகள் வழியாக தேவாலயத்தை வந்தடைந்தது.

தேவாலய பங்குத் தந்தை அருட்பணி ரி.லோரண்ஸ் தலைமையில் இடம்பெற்ற ஊர்வலத்தில் அடியார்கள் ஒளியேற்றிய மெழுகுதியை ஊர்வலத்தில் எடுத்துச் சென்றனர். அலங்கரிக்கப்பட்ட வீதிகளில் புனித செபஸ்தியாரின் உருவப் படங்கள் காட்சிப் படுத்தப்பட்டிருந்தன.

இதேவேளை கடந்த ஞாயிறு (15) மாலை புனித செபஸ்தியாரின் திருச்சொரூபம் புதிதாக அமைக்கப்பட்ட பீடத்தில் நிர்மாணிக்கப்பட்டு இயேசு சபையின் மேலாளர் கலாநிதி போல் சற்குணநாயகத்தால் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.