வியாபார நிலையங்களில் உணவினைப் பரிசோதிப்பதற்கான நடவடிக்கை இம்மாத இறுதிவரை


சந்தைக்கு விநியோகிக்கப்படும் உணவு மற்றும் குளிர்பானங்களின் தரத்தை பரிசோதிப்பதற்காக இம்மாதம் ஆரம்பத்தில் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டம் இம்மாதம் இறுதிவரை முன்னெடுக்கப்படும்.
இந்த பரிசோதனை நடவடிக்கையை உணவு, சுகாதார பிரிவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரி மேற்கொண்டுவருகிறது.

நாட்டில் 24 மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட உணவு மாதிரிகள் இதன் கீழ் பரிசோதனை செய்யப்படுகின்றன என்று சுகாதார அமைச்சின் உணவு பரிசோதனை மற்றும் தொழில் சுகாதார பிரிவின் பணிப்பாளர் டொக்டர் லஷ்மன் கமலத் தெரிவித்துள்ளார்.