மாங்காட்டு விபத்தில் உயிரிழந்த ஓந்தாச்சிமடம் இளைஞரின் சடலத்திற்கு ஆயிரக்கணக்கானோர் இறுதி அஞ்சலி


(சிவம்)
மட்டக்களப்பு மாங்காட்டில் நேற்று (20) இடம்பெற்ற வாகன விபத்தில் பரிதாபகரமாக உயிரிழந்த ஓந்தாச்சிமடம் 36 ஆம் வீட்டுத் திட்டத்தைச் சேர்ந்த இராசரெட்ணம் தினேஸ்காந்த் வயது (27) இளைஞனின் உடலம் ஆயிரக் கணக்கானோரின் கண்ணீர் அஞ்சலிக்கு மத்தியில் இன்று (21) ஓந்தாச்சிமடம் இந்து மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

சடலம் நேற்று (20) முதல் அன்னாரின் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தபோது அரசியல் பிரமுவர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், வர்த்தகப் பிரமுவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு இறுதியஞ்சலி செலுத்தினர்.

மட்டக்களப்பு மாவட்டத்தை நேற்று (20) முதல் இக்கோர விபத்து சோகத்தில் ஆழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.