மட்டக்களப்பு குமாரபுரத்தில் பூட்டியிருந்த வீட்டில் கொள்ளை

மட்டக்களப்பு குமாரபுரம் பிரதேசத்தில் பூட்டியிருந்த வீட்டை இரவில் உடைத்து தங்கநகைகளை கொள்ளையிட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மட்டு. தலைமையகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குமாரபுரத்தில் உள்ள குறித்த வீட்டின் உரிமையாளர்கள் கடந்த இரு நாட்கள் இல்லாத நிலையிலேயே நேற்று (10) இரவு வீட்டின் கதவை உடைத்து இக்கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவத்தில் வீட்டிலிருந்த 21 பவுண் தங்க ஆபரணங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.