அடுத்த உள்ளூராட்சி மன்றத்தேர்தல் கலப்புமுறையில் இடம்பெறும்

இனிவரும் உள்ளூராட்சி மன்றத்தேர்தல்களை கலப்புமுறையில் நடத்தத் திட்டமிட்டிருப்பதாக மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

மாத்தறை பிரதேசத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டபின், ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘நாட்டில் இனிவரும் காலங்களில் உள்ளூராட்சி மன்றத்தேர்தலை கலப்பு முறையில் நடத்துவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. பெரும்பாலானோருக்கு விருப்புவாக்கு முறைத் தேர்தலுக்கு விருப்பமில்லை.

எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் இது தொடர்பான நடவடிக்கைகளுக்கு அனைவரினது ஒத்துழைப்பும் அவசியம் என்பதுடன், தற்போதைய தேர்தல் முறையை பாதுகாத்துக் கொள்வதற்காக அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்’ என அமைச்சர் பைசர் முஸ்தபா மேலும் தெரிவித்துள்ளார்.