நகர சபைத் தலைவர் கடமையேற்பு


(கதிரவன் திருகோணமலை)
திருகோணமலை நகர சபை தலைவர் நாகராசா இராசநாயகம்  புதன்கிழமை 2018.04.11  காலை தனது அலுவலகத்தில் 11.25 மணிக்கு கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். நகரசபையின் செயலாளர் வி.ஜெயவிஷ்ணு அவர்கள் வழங்கிய வரவு புத்தகத்தில் முதல் கையெழுத்திட்டார்.

அதனைத் தொடர்ந்து  நகர சபை உறுப்பினர்கள் சகிதம் நகர சபை பிரிவுகளின் பிரதானிகளுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.
திண்மக்கழிவு அகற்றல், வருமான அதிகரிப்பு, வேலைப்பகுதி வேலைகள், வாகன தரிப்பிடம் கட்டண அறவீடு, சுகாதார செயற்பாடு  பொதுச்சந்தை, வாகன பராபரிப்பு என்பவைகள் பற்றி இங்கு கலந்தரையாடப்பட்டது. சுமார் ஒரு மணிநேரம் இக்கலந்துரையாடல் இடம் பெற்றது.