முச்சக்கர வண்டி தொடர்பில் புதிய விதிமுறை இன்று முதல் அமுலுக்கு

பயணிகளுக்கு பற்றுச்சீட்டு வழங்கும் வகையில் முச்சக்கரவண்டிகளுக்கு கட்டண அறவீட்டு மீட்டர் பொருத்தும் நடவடிக்கை இன்று முதல் அமுலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக, வீதி பாதுகாப்பு அதிகார சபை அறிவித்துள்ளது.

குறித்த சட்ட நடவடிக்கைகளுக்கு எதிராக செயற்படும் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென அச்சபையின் தலைவர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார்.

அத்துடன் கட்டணச் சீட்டு வழங்காத முச்சக்கரவண்டிகள் தொடர்பில் 0112696890 என்ற இலக்கத்துக்கு பொதுமக்கள் முறைப்பாடு செய்ய முடியுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறித்தச் சட்டம் நடைமுறைக்கு ஏற்புடையதல்லயென முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கம் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.