கல்லடிப் பாலத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பாய்ந்துள்ளார்


கல்லடிப் பாலத்தில் இருந்து குடும்பஸ்த்தர் ஒருவர் பாய்ந்துள்ளார். இச் சம்பவமானது இன்று அதிகாலை 5 மணி வேளையில் இடம்பெற்றுள்ளது. சின்ன ஊரணியைச் சேர்த்த 45 வயது மதிக்கத்தக்க தங்கவேல் ஜெயராஜ் எனும் குடும்பஸ்தரே இவ்வாறு தற்கொலை செய்வதற்காக பாய்ந்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவர் ஒரு சாரதி என்பது குறிப்பிடத்தக்கதுடன் நபரைத் தேடுவதற்காக அப் பிரதேச மக்கள் இறங்கியுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணையை போலீசார் மேற்கொண்டுள்ளனர்.
அண்மைக் காலத்தில் கல்லடிப் பாலத்தில் தற்கொலை செய்துகொள்ளும் வீதம் அதிகரித்துள்ளது. இரு பாலங்களில் புதியதில் மாத்திரம் பிரயாணிகள் நடமாட்டம் இருப்பதால் பெரும்பாலான தற்கொலையாளிகள் பழைய பாலத்தினை தக்களது தளமாக பாவிக்கின்றனர்.