க.பொ.த உயர்தர பரீட்சையில் சித்தி பெற்ற பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்

தமது அங்கத்தவர்களின் பிள்ளைகளில் க.பொ.த உயர்தர பரீட்சையில் சித்தி பெற்ற பிள்ளைகளுக்கு 12 ஆயிரம் ரூபா பெறுமதியான புலமைப்பரிசிலை வழங்க ஊழியர் நம்பிக்கை நிதியம் ஏற்பாடு செய்துள்ளது.

இந்த புலமைப்பரிசில் தொகையை பெறுவதற்காக மூவாயிரத்து 500 இற்கும் மேற்பட்டோர் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளதாக நிதியத்தின் பிரதி பொது முகாமையாளர் வசந்த திசாநாயக்க குறிப்பிட்டார்.

இது குறித்து நிதியத்தின் பிரதி பொது முகாமையாளர் மேலும் தெரிவிக்கையில்,

விண்ணப்பங்கள் கணனிமயப்படுத்தப்பட்டு வருவதாகவும், விண்ணப்பங்களை ஏற்பதற்கான கால எல்லை முடிவடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

எனினும் இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் விரைவாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என கூறினார்.

இம்முறை ஐயாயிரம் பேருக்கு புலமைப்பரிசில் வழங்கப்படவுள்ளது என்று தெரிவித்தார்.