தீப்பற்றி எரிந்த எட்டுமாத குழந்தையின் தாய் உயிரிழப்பு

கொக்கட்டிச்சோலை, காவல் பிரிவிற்குட்பட்ட கிராமத்தில் வசித்து வரும், இளந்தாயொருவர் தீப்பற்றி எரிந்து, சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று (19) உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 கொக்கட்டிச்சோலை, கிராமத்தில் வசித்துவரும் 21 வயதுடைய துரையப்பா பிறேதா என்ற எட்டுமாத குழந்தையின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 குறித்த பெண், கடந்த வியாழக்கிழமை இரவு தீப்பற்றி எரிந்த நிலையில், மட்டக்களப்பு மாவட்ட போதனா வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சைபெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.