தேசிய அரசாங்கத்தில் இருந்து, இன்னும் 20 இற்கும் மேற்பட்டவர்கள் வெளியேறவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் நேற்று (வெள்ளிக்கிழமை) வழிபாடுகளை மேற்கொண்டதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
“தேசிய அரசாங்கத்தின் அமைச்சர் பதவிகளை துறந்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த 16 பேரும் தமக்கு நம்பிக்கையானவர்கள். தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டு 3 மாதங்களிலேயே பசு மாடும், எருமை மாடும் இணைந்து வண்டியினை இழுக்க முடியாது என கூறியிருந்தேன்.
அதேபோலவே, தற்போது தேசிய அரசாங்கத்தில் இருந்து பலர் வெளியேறுகின்றனர். ஏற்கனவே வெளியேறிய 16 பேரும் ஜனாதிபதி தேர்தலின் போது தன்னுடன் இணைந்து பணியாற்றியவர்கள்” என கூறினார்.
கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் நேற்று (வெள்ளிக்கிழமை) வழிபாடுகளை மேற்கொண்டதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
“தேசிய அரசாங்கத்தின் அமைச்சர் பதவிகளை துறந்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த 16 பேரும் தமக்கு நம்பிக்கையானவர்கள். தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டு 3 மாதங்களிலேயே பசு மாடும், எருமை மாடும் இணைந்து வண்டியினை இழுக்க முடியாது என கூறியிருந்தேன்.
அதேபோலவே, தற்போது தேசிய அரசாங்கத்தில் இருந்து பலர் வெளியேறுகின்றனர். ஏற்கனவே வெளியேறிய 16 பேரும் ஜனாதிபதி தேர்தலின் போது தன்னுடன் இணைந்து பணியாற்றியவர்கள்” என கூறினார்.