இலங்கையில் வைரஸ் தொற்றின் காரணமாக 13 பேர் பலி! உயிரிழப்புக்கள் அதிகரிக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள சம்பவம்!


தென் மாகாணத்தில் தற்போது பரவிவரும் வைரஸ் தொற்றின் காரணமாக 11 சிறுவர்கள் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்புளுவன்ஸா வைரஸ் நிலைமையுடனான எடிநோ வைரஸ் மற்றும் நியூமோகொகல் பற்றீரியா தாக்கத்தின் காரணமாக இந்தக் காய்ச்சல் பரவுவதாக தென் மாகாண சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த நோயானது சிறு குழந்தைகள், கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் இருதய நோயாளர்களை அதிகளவில் தாக்கக்கூடும் என சுகாதார சேவை பணிப்பாளரான விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.