35 பயணிகளை காப்பாற்றி விட்டு தன் உயிரைத் தியாகம் செய்த பேருந்து சாரதி!


35 பயணிகளின் உயிர்களை காப்பாற்றி விட்டு உயிரிழந்த பேருந்து சாரதி தொடர்பான தகவல் எமது செய்தி சேவைக்கு தெரியவந்துள்ளது.

நேற்று அநுராதபுரத்தில் இருந்து கண்டி நோக்கி பயணித்த அதி சொகுசு பேருந்தின் சாரதிக்கு மஹவெல – கவுடுபெலெல்ல பிரதேசத்தில் வைத்து திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

பின்னர் சாரதி பேருந்தை மண் மேடொன்றில் செலுத்தி நிறுத்தி ஏற்படவிருந்த பாரிய விபத்தை தவிர்த்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

எனினும் சாரதிக்கு பேருந்தை கட்டுபடுத்த முடியாமல் போயிருந்தால் 35 பயணிகளுடன் அந்த பேருந்து பாரிய பள்ளம் ஒன்றில் வீழ்ந்திருக்க வாய்ப்பிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாரடைப்பு ஏற்பட்ட சாரதியை மருத்துவனையில் அனுமதிக்க பயணிகள் நடவடிக்கை எடுத்திருந்த போதும் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அநுராதபுரம் - சாலியபுர பிரதேசத்தை சேர்ந்த சாரதியே இவ்வாறு பலரின் உயிரை காப்பாற்றி விட்டு உயிரிழந்துள்ளார்.