செங்கலடி கரடியனாற்றில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச்சென்ற 5 பேர் கைது!


மட்டக்களப்பு – கரடியனாறு பிரதேசத்தில் சட்டவிரோதமாக ஆற்று மண்ணை ஏற்றிச்சென்ற 5 பேரை இன்று (15) காலை கரடியனாறு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

குறித்த சட்டவிரோத செயலில் ஈடுபட்டோர் ஐந்து உழவு இயந்திரத்தில் ஆற்று மண்ணை ஏற்றிச்சென்றபோதே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கரடியனாறு பொலிஸார் வீதிச்சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது சட்டவிரோதமாக ஆற்று மண்ணை ஏற்றிவந்த குறித்த ஐந்து உழவு இயந்திரங்களைக் கைப்பைற்றியதுடன், ஐந்து சந்தேகநபர்களையும் கைதுசெய்தனர்.

இச்சம்பவத்தில் கைதுசெய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.