துறைநீலாவணை வைத்தியசாலையில் ஆண் நோயாளர்களுக்கான விடுதிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு


(சா.நடனசபேசன்,தாஸன்)
துறைநீலாவணை வைத்தியசாலையில் ஆண் நோயாளர்களுக்கான விடுதிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வும் புதிதாக அமைக்கப்பட்ட அவசரசிகிச்சைப்பிரிவு திறந்துவைக்கும் நிகழ்வும் 25 ஆம் திகதி வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் எம்.ஏ.சி.ரி.ஹரீட் தலைமையில் நடைபெற்றது
 இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்குமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஏ.எச்.அன்ஸார் மற்றும் கிழக்குமாகாண சுகாதாரசேவைகள் பணிப்பாளர் கே.முருகானந்தம் கிழக்குமாகாண திட்டமிடல் பணிப்பாளர் டாக்டர் பிரேமநாத்  மட்டக்களப்பு சுகாதாரசேவைகள் பணிப்பாளர் டாக்டர் திருமதி எல்.எம்.நவரெட்ணராசா மட்டக்களப்பு பிராந்திய சுகாதாரசேவைகள் திட்டமிடல் அதிகாரி டாக்டர் குகன் கஸ்தூரி மண்முனை தென் எருவில்பற்று பிரதேசசபை உறுப்பினர் க.சரவணமுத்து ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதில் 80 இலட்சம் பெறுமதியான ஆண் நோயாளர் விடுதிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது இந்நிகழ்வில் வரவேற்புரையினை வைத்தியசாலையின் அபிவிருத்திக்குழுத் தலைவரும் அதிபருமான பி.யோகராசா நன்றியுரையினை அபிவிருத்திக்குழுவின் செயலாளர் ஓய்வுநிலை அதிபர் பூ.நவரெட்ணராசா ஆகியோர் நிகழ்த்தினர்.