கட்டாரில் பணிபுரியும் இலங்கையர் தொடர்பான அதிர்ச்சித் தகவல்!


டோஹா கட்டாரில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள பல இலங்கையர்கள், உரிய வேதனம் கிடைக்கப்பெறாத நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அங்குள்ள கட்டுமான நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகின்ற சுமார் 1200 பேருக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் வேதனம் வழங்கப்பட்டிருக்கவில்லை.

பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 550 பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்று த ஹிந்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் தங்களது இந்த பிரச்சினை குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.