தாயும் மகளும் ஆற்றிலிருந்து சடலங்களாக மீட்பு!


தெஹியத்தகண்டி – பிஹிரிசோரோவ்வ ஆற்றிற்கு அருகில் இருந்து தாயொருவரும், குழந்தையொன்றும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

இன்று பிற்பகல் அவர்கள் இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

30 வயதான தாயும், 4 வயதான பெண் குழந்தையுமே உயிரிழந்துள்ளனர்.

நீரில் மூழ்கி அவர்கள் உயிரிழந்திருக்க கூடும் என காவல்துறை சந்தேகிக்கிறது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெஹியத்தகண்டி காவல்துறையினர் தெரிவித்தனர்