மட்டக்களப்பில் காதல் விவகாரத்தால் ஒரே வயதுடைய இரு இளம் யுவதிகள் சடலங்களாக மீட்கப்பட்ட பரிதாபம்!


மட்டக்களப்பு பகுதியில் இரு யுவதிகளின் சடலங்கள் வெவ்வேறு பகுதிகளிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் ஏறாவூர், குமாரவேலியார் பகுதியைச் சேர்ந்த கஜேந்திரன் நிஸாந்தினி (வயது 19) என்பவரின் சடலம், அவர் பெற்றோருடன் வசித்து வந்த வீட்டிலிருந்து கண்டெடுக்கப்பட்டது.

இதேபோன்று கரடியனாறு, கனித்தீவு கிராமத்தைச் சேர்ந்த சௌந்தரராஜன் வினோதினி (வயது 19) என்பவரின் சடலமும் அவர் பெற்றோருடன் வசித்து வந்த வீட்டிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்தவகையில் சம்பவத்தில் உயிரிழந்த இருவரும் காதல் பிரச்சினைகள் காரணமாக உயிரிழந்திருக்கலாமென பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் ஒரே நாளில் இவ்விரு சம்பவங்களும் இடம்பெற்றுள்ளமையால் ஒன்றுடன் ஒன்று தொடர்பட்டதா அல்லது வெவ்வேறானதா என்ற கோணத்தில் ஏறாவூர் மற்றும் கரடியனாறு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.