தீவிரமடையும் டெங்கு நோயினை கட்டுப்படுத்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல்





தீவிர நிலையை அடைந்திருக்கும் டெங்கு நோயினை கட்டுப்படுத்தல் மற்றும் ஒழிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திரு.கு.குணநாதன் தலைமையில் திங்கள் (28.05.2018) அன்று இடம்பெற்றது.

இதன்போது டெங்கு நோயினை கட்டுப்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு மற்றும் ஜனாதிபதி செயலணியின் டெங்கு கட்டுப்படுத்தல் தொடர்பான சில முக்கிய அறிவிப்புகளும் சுகாதார வைத்திய அதிகாரியினால் வருகைதந்தோருக்கு வழங்கி விளக்கமளிக்கப்பட்டது.

இவ் நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர், கணக்காளர், சமுர்த்தி முகாமையாளர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட அரச திணைக்கள தலைவர்கள், பாடசாலை அதிபர்கள், பிரதேச அனர்த்த முகாமைத்துவ கிராமமட்ட குழுக்கள், விளையாட்டு கழகங்கள், கிராம மட்ட அபிவிருத்தி சங்க உறுப்பினர்களும்  கலந்து கொண்டனர்.