ஒரு சமூகத்தின் வளர்ச்சி என்பது கல்வியின் வளர்ச்சிதான் - தவிசாளர் ஸோபா ஜெயரஞ்சித்



வாழைச்சேனை புதுக்குடியிருப்பு  திருவள்ளுவர் சனசமூக நிலையத்தின் பத்தாவது ஆண்டு நிறைவு விழாவும் மாணவர் ளெரவிப்பும் வாழைச்சேனை புதுக்குடியிருப்பு வாணிவித்தியாலய மண்டபத்தில் திருவள்ளுவர் சனசமூக நிலையத்தின் தலைவர் திருமதி.பி.மெத்தியஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கோறளைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் திருமதி. ஸோபா ஜெயரஞ்சித் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்து உரையாற்றினார்.
அந்நிகழ்வில் அவர் தொடரந்;து உரையாற்றும் போது  ஒரு சமூகத்தின் வளர்ச்சி என்பது அப்பிரதேசத்தின் கல்வி வளர்சியினாலேயே ஏற்படுகின்றது. அந்தவகையில் கல்விச் சமூகத்தின் மாணவர்களை பாராட்டும் நிகழ்வை ஒரு கிராமத்தின் சனசமூக அமைப்பு ஏற்பாடு செய்திருப்பதானது பாரட்டுதற்குரியது.ஏனெனில் இச்சனசமூக அமைப்பு தம் கிராம மக்களின் கல்வியில் அக்கறை கொண்டமையை இந்நிகழ்வு பறை சாற்றுகின்றது.இப்பாராட்டைப்பெறும் மாணவர்கள் இதனை விளங்கிக் கொண்டு தமது அடுத்தகட்ட உயர்கல்வியை வெற்றி பெற அயராது உழகை;கவேண்டும்.ஏனென்றால் கல்வி கற்றவரே சமூகத்தில் மதிக்கப்படுவர்.மனித வாழ்வுக்காலம் குறைவுதான்.எனவே அந்த அழகிய வாழ்நாளுக்குள் நாம் கற்கவேண்டியவற்றைக்கற்றால் அதற்கு அழிவில்லை. நாளை நம்தேசத்தை பிரதேசத்தை கிராமத்தை அரசியலாலும் கல்வியாலும் ஆழப்போவது நீங்கள்தான்.அதற்குப் பெற்றோர்கள் அவதானத்துடனும் பொறுப்புணர்சியுடனும் செயற்படவேண்டும்.நவீன தொழினுட்பக்கடலில் பயணிக்கச் செய்வதற்குரிய பயிற்சியை இக் கல்விச் சமூகம் வழங்கவேண்டும்.அவர்கள் நவீன தொழினுட்பக்கடலில் மூழ்கிவிடாதபடி பார்த்தக் கொள்வது நமது பொறுப்பும் கடமையுமாகும் என்றார்.

இந்நிகழ்வில் கௌரவ அதிதிகளாக பிரதேச சபை உறுப்பினர் க.கமலநேசன்இபிரதேச செயலாளர் வ.வாசுதேவன் பிரதேசசபைச் செயலாளர் ஏ.தினேஸ்குமார் எனப்பலரும் கலந்து கொண்டனர். 2017 இல் சாதாரதரப்பரீட்சையில் விசேட திறமைகளைக்காட்டிய வாழைச்சேனை - புதுக்குடியிருப்பைச்சேர்ந்த மாணவர்கள் கௌரவிக்கப்பட்டு அன்பளிப்புக்களும் வழங்கப்பட்டன.