விமான நிலையத்தில் வெளிநாட்டவர் பணத்தை மாற்றிக்கொள்வதற்கு கருமபீடங்கள்


கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தரும் வெளிநாட்டவருக்கு நிதியை பரிமாற்றிக் கொள்வதற்கு வசதியாக கருமபீடங்களை அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை சுங்கப்பகுதியினால் கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் நடத்தப்பட்டு வரும் பிரதேசத்திற்கு அப்பால் அமைக்கப்பட்டுள்ள வருகை தருவோர் பிரிவில் பணத்தை மாற்றிக் கொள்வதற்கான கருமபீடத்தை முன்னேற்றம் செய்வதற்கான அனுமதி அமைச்சரவையில் நியமிக்கப்பட்ட நிலையான குழு சிபாரிசுக்கு அமைவாக 

கொமர்ஷல் வங்கி , இலங்கை வங்கி, சம்பத் வங்கி , மக்கள் வங்கி முதலான நிதி நிறுவனங்களுக்கு வழங்கும் பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.