அரச இலத்திரணியல் ஊடக நிறுவனங்களின் புதிய தலைவர்களுக்கு நியமனக்கடிதங்கள் கையளிப்பு

அரச இலத்திரணியல் ஊடக நிறுவனங்களின் தலைவர்களாக நியமிக்கப்பட்ட புதிய தலைவர்கள் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவிடம் தமது நியமனக்கடிதங்களை பெற்றுக்கொண்டனர்.

ஊடகத்துறை அமைச்சில் இன்று இந்த நிகழ்வு இடம்பெற்றது.இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் - சிரேஷ்ட திரைப்பட இயக்குனர திருமதி இனோக்கா சத்யாங்கனி

சுயாதீன தொலைக்காட்சி சேவை நிறுவனம் - திருமதி திலக ஜயசுந்தர இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் - மொஹமட் சித்திக் பாருக் செலசினே தொலைக்காட்சி நிறுவனம் - திருமதி உமா ராஜமந்திரி ஆகியோர் தமது நியமனக்கடிதங்ளை அமைச்சர் மங்கள சமரவீரவிடம் பெற்றுக்கொண்டனர்.

இந்த நிகழ்வில் ஊடக பிரதி அமைச்சர் லசந்த அழகியவண்ண , நிதி இராஜாங்க அமைச்சர் இரான் விக்கிரமரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.