வாசகர்களின்
வாசிப்புத்திறனை மேம்படுத்தும் நோக்குடனும் ஆர்வமுள்ள அநேகரின் வேண்டுகோளிற்கிணங்கவும் மட்டக்களப்பிலிருந்து மாதமொரு பத்திரிகையாக வெளிவரும் தமிழ் ஓசை பத்திரிக்கையின் ஆறாவது இதழ் மட்டக்களப்பு நகரில் இன்று ஞாயிற்றுக்கிழமை (27) இலவசமாக
வாசகர்களுக்கு விநியோகிக்கப்பட்டது .
பத்திரிகை குழுமத்தினருடன்
சிரேஸ்ட ஊடகவியலாளரும் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினருமான சிவம் பாக்கியநாதன் இப்பத்திரிகையின் பிரதிகளை வைபவரீதியாக மட்டக்களப்பு பொதுச் சந்தைக்கு வருகைதந்த பொது மக்கள் மற்றும் வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு வைபவ ரீதியாக வழங்கி வைத்தார்.