தொண்டராசிரியர் நியமனத்தில் அநீதி இழைக்கப்படாது! முறைகேடுகள் எனில் தொடர்பு கொள்ளலாம் - கிழக்கு ஆளுநர்


(வெல்லாவெளி க. விஜயரெத்தினம்)
தொண்டராசிரியர்களுக்கு நியமனங்கள் வழங்கும்போது யாருக்கும் அநீதி இழைக்கப்படும் விதத்தில் நியமனங்கள் வழங்குவதற்கு இடமளிக்கப்படாது
என கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகல்லாகம தெரிவித்துள்ளார்.

நியமனத்திற்காக வெளியிடப்பட்டுள்ள தொண்டராசிரியர் பட்டியலில் முறைகேடுகள் நடந்துள்ளதாக பரவலாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வரும் நிலயில், ஆளுநர் மேற்படி விடயத்தை(15.5.2018) ஆளுநர் செயலகத்தில் வைத்து ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இவ்விடயத்தில் அநீதி ஏற்படுத்தப்பட்டிருந்தாலும், முறைகேடுகள் இடம்பெற்றிருக்கிறது என்று யாராவது கருதினாலும் செயலகத்துடன் தொடர்புகொள்ளுமாறும், அளுநர் இதன்போது மேலும் கருத்துவெளியிடுகையில் குறிப்பிட்டதாக அவரின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நியமனத்திற்கான பெயர்பட்டியல் வெளியான பின்பு பாதிக்கப்பட்டதாக கருதப்படும் தொண்டராசிரியர்கள் பல இடங்களிலும் போராட்டங்களை நடாத்தியதுடன் நியமனத்திற்காக பரிந்துரைக்கப்பட்ட பட்டியலில் தவறானவர்களின் பெயர்கள் புகுத்தப்பட்டிருப்பதாகவும் போராட்டத்தின்போது சுட்டிக்காட்டியிருந்தனர். இவ்வாறான நிலையிலேயே ஆளநரின் மேற்படி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளன.