கிரியுல்ல பிரதேசத்தினைச் சேர்ந்த 29 வயதான டிலான் சம்பத் என்பவரே இவ்வாறு நீரில் அடித்துச் செல்லப்பட்டுக் காணாமல்போயுள்ளார்.
கடும் வெள்ளப் பெருக்குக் காரணமாக வெளியேற முடியாது தவித்த மக்களை மீட்பதற்காக கல்கமுவ-உடலவெல கால்வாய்க்கு அப்பால் செல்வதற்கு முயன்ற போதே, நீரலையில் சிக்கிக் காணாமல் போய்யுள்ளார்.
குறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளதுடன், அவரைத் தேடும் பணிகளில், கடற்படையினர் ஈடுபட்டுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.