வீட்டின் முன்னால் நின்ற பெண்ணின் தாலியை அறுத்துச் சென்ற இளைஞன் ! சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது

திருக்கோவிலில்   இளைஞன் ஒருவர் வீட்டுக்கு முன்னால் நின்றுகொண்டு இருந்த பெண்ணின் 7அரைப் பவுண் தாலியை அறுத்துச் சென்றுள்ளதாக திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் குறித்த பெண் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளாா்.

நேற்று(29-05-2018) செவ்வாய்க்கிழமை இரவு குறித்த பெண் தனது வர்த்தக நிலையத்தினை மூடிவிட்டு வீட்டின் முன்னால் வேலை செய்து கொண்டு இருந்த வேளை இளைஞர் ஒருவர் பெண்ணின் தாலியை அறுத்துச் சென்றுள்ளாா்.

இதனையடுத்து குறித்த பெண் திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் சந்தேக நபர் ஒருவரின் பெயரை குறிப்பிட்டு முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளார்.

இந்த முறைப்பாட்டினை அடுத்து திருக்கோவில் பொலிசார் 31 வயதுடைய இளைஞன் ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதுடன்இ இந்த திருட்டு சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.