நீரில் மூழ்கி இளைஞன் பலி


மட்டக்களப்பு சந்திவெளி ஆற்றில் தோணியில் நண்பருடன் சென்ற தோணி கவிழ்ந்ததில் நீரில் மூழ்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (25) இரவு இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்திவெளி பிள்ளையார் கோவில் வீதியைச் சேர்ந்த 21 வயதுடைய யோகராசா என்பவரே .வ்வாறு உயிரிழந்தள்ளார்.

குறித்த நபர் திகிலிவட்டை கிராமத்தில் நண்பரின் மரண வீட்டிற்கு செல்வதற்காக தனது இரு நண்பர்களுடன் சம்பவதினம் இரவு 10 மணியளவில் சந்திவெளி ஆற்றைக் கடந்து திகிலிவெட்டை பிரதேசத்திற்கு தோணியில் ஏறி ஆற்றினை கடக்க முற்பட்ட வேளை தோணி கவிழ்ந்ததில் ஒருவர் நீரில்; மூழ்கி உயிரிழந்துள்ளதுடன் ஏனைய இருவரும் உயிர் தப்பியுள்ளனர்.


இதனையடுத்து இன்று காலை சடலம் ஆற்று வாழiயில் சிக்குண்ட நிலையில் கரையொதுங்கிய நிலையில் சடலத்தை பொலிசார் மீட்டனர்


இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர்ப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.