இலங்கையின் புதிய வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது.

காலி முகத்திடலில் நிர்மாணிக்கப்பட்டுவரும் துறைமுக நகரை உள்ளடக்கிய தலைநகரின் புதுப்பிக்கப்பட்ட வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது.

நில அளவைத் திணைக்களத்தினால் காணி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக்க முன்னிலையில், புதிய வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது.

18 ஆண்டுகளின் பின்னர் இப்புதிய வரைபடம் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.