வேன் மோதி பாரிய விபத்து ! திருமணத்திற்காக சென்ற 11 பேர் வைத்தியசாலையில் !!


தம்புள்ளை - அனுராதபுரம் பிரதான வீதியில் புலாகல பாலத்திற்கு அருகில் வேன் வாகனமொன்று வீதியை விட்டு விலகி அருகில் இருந்த மின்மாற்றியில் (Transformer) மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 11 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்தில் காயமடைந்தவர்களை தம்புள்ளை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது..

குறித்த வேனில் 12 பேர் பயணித்துள்ள நிலையில் , வெலிமட - பொரலன்த பிரதேசத்தை சேர்ந்தவர்களே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

இவர்கள் திருமண விவகாரத்திற்காக வவுனியா நோக்கிய சென்றிருந்த வேளையில் இந்த அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ளனர்.

சாரதியால் வேன் வாகனத்தின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவற்துறை தெரிவித்தனர்.