மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள மாங்கேணி பாம் கொலனி பிரதேசத்தில், கடந்த 12 ஆம் திகதி ஆடுகளை மேய்க்கச் சென்ற 12 வயது சிறுமியை அதே பிரதேசத்தை சேர்ந்த சிறுவர்கள் துஷ்பிரயோகம் மேற்கொண்டு விட்டுத் தப்பி ஓடியுள்ளனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி பயம் காரணமாக வெளியில் தெரிவிக்காமல் இருந்து வந்துள்ள நிலையில் தனக்கு ஏற்பட்ட விபரீத நிலை தொடர்பாக நேற்றுத் தனது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து உறவினர்கள் உடனடியாகப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து பொலிஸார் ஆரம்ப விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
குறித்த விசாரணைகளின்போது பொலிஸார் சந்தேகத்தின் பேரில் 14 மற்றும் 15 வயதுடைய இரு சிறுவர்களைக் கைது செய்துள்ளதுடன், பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.