மீன்பிடி படகில் 54 பேரை அவுஸ்திரேலியாவிற்கு அழைத்து செல்ல முற்பட்டவருக்கு நடந்த விபரிதம் !


சட்டவிரோதமாக மீன்பிடி படகில் 54 பேரை அவுஸ்திரேலியாவிற்கு அழைத்து செல்வதற்கான ஒழுங்குகளை மேற்கொண்ட மூன்று பேருக்கு தலா ஒரு வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2012 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 6 ஆம் திகதி 54 பேரை இவ்வாறு அவுஸ்திரேலியாவிற்கு அழைத்து செல்வதற்கான ஒழுங்குகளை மேற்கொண்ட போது கடற்படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் இதனை ஒழுங்கு செய்த மூன்று நபர்களுக்கு எதிராக காலி நீதவான் நீதிமன்றத்தில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், நேற்யை தினம் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போது குறித்த மூன்று பேருக்கும் தலா ஒரு வருடம் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.