ஆரையம்பதியில் 6 பிள்ளைகளின் தந்தை வெட்டிக் கொலை !!


காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி, மாவலிங்கன்துறை கிராமத்தில் வீட்டுத்திட்ட குடியிருப்பில் ( ஈரான் சிட்டி ) இன்று சனிக்கிழமை  மாலை 4.00 மணி வேளையில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிக் கொலைசெய்யப்பட்டுள்ளார்.

ஆறு பிள்ளைகளின் (3 ஆண், 3 பெண்) தந்தையான கூலித்தொழிலாளி மா. லெட்சுமணன் (வயது 43) என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது , பக்கத்து வீட்டுக் காரர் பழைய பகை காரணமாக ஐவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறு,

இதனால் பக்கத்து வீட்டுக் காரர் நால்வரின் ஒத்துழைப்புடன் தலையை கொத்தி கொலை செய்துளார். வாய்த் தர்க்கத்தில் ஈடுபட்டு மரம் சீவும் கருவியால் (வாச்சு) தாக்கியதில் பலத்த காயம் ஏற்பட்டத்தில் மரணம் சம்பவித்துள்ளது என குறிப்பிடப்படுகின்றது.

வெட்டுச் சம்பவமானது உயிரிழந்தவரின் வீட்டு முற்றத்திலேயே இடம்பெற்றுள்ளது, சம்பவத்தை நேரில் பார்த்த குழந்தைகள் பெரும் அதிர்ச்சிக்கும், உள ரீதியான பாதிப்புக்கும் உள்ளாகியுள்ளனர்,

சந்தேக நபர் தப்பிசென்றுள்ள வேளையில் தேடும் பணியில் காத்தான்குடி பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.

மனைவி மற்றும் ஆறு பிள்ளைகளை அனாதரவாக்கிய இக் கொலை சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளதுடன். ஒரு குடும்பமானது  குடும்பத் தலைவரை இழந்த நிலையில் பெரும் பரிதாபத்துடன் அனாதரவாக்கப்பட்டுள்ளது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்திய சாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணையை காத்தான்குடி போலீசார் மேற்கொண்டுள்ளனர்.