8 மாத குழந்தையைக் கடத்திய சந்தேகநபர்கள் ஏறாவூரில் வைத்து கைது!


வவுனியா குட்செட் வீதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து 8 மாதங்களுடைய குழந்தை ஒன்று கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் 8 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவற்துறை இதனை தெரிவித்துள்ளது.

நேற்று இரவு மட்டக்களப்பு - ஏறாவூர் பிரதேசத்தில் வைத்து, குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த குழந்தையை கடத்திய சம்பவம் தொடர்பில், இதற்கு முன்னர் புதுக்குடியிறுப்பு பிரதேசத்தில் வைத்து இரு பெண்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சந்தேக நபர்கள் வவுனியா நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

கடந்த 31 ஆம் திகதி குறித்த குழந்தை கடத்தப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.