தொழிற்பயிற்சி நெறியினை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம் - 2018

EREEDO  தொழிற்பயிற்சி நிறுவனத்தின் கடந்த வருடம் கையடக்க தொலைபேசி திருத்துனர் , உதவித்தாதியர் மற்று கணணி உதவியாளர் போன்ற தொழிற்பயிற்சிகளை வெற்றிகரமாக பூர்த்தி செய்த மாணவர்களை கௌரவித்து சான்றிதழ் வழங்கும் வைபவமானது நேற்று  31.05.2018 வியாழக்கிழமை, மட்டக்களப்பு மன்றேசா வீதியில் அமைந்துள்ள EREEDO  தொழிற்பயிற்சி நிறுவனத்தின் ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.


இந்நிகழ்வானது EREEDO  தொழிற்பயிற்சி நிறுவனத்தின் ஸ்தாபகரும், பணிப்பாளருமாகிய த.மயூரன் தலைமையில் இடம்பெற்றது

இந்நிகழ்வில் பிரமத விருந்தினராக கிழக்கு மாகாணசபையின் முன்னால் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் அவர்கள் கலந்து கொண்டதுடன், சிறப்பு அதிதிகளாக World Vision Lanka   நிறுவனத்தின் திருகோணமலை மாவட்டத்தின் முகாமையாளர், நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் மற்றும் வாகரை அலுவலகத்தின் முகாமையாளர், AMCOR  நிறுவனத்தின் நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் மற்றும் வெளிக்கள உத்தியோகஸ்தர்கள், Ocean Stars Lanka  நிறுவனத்தின் திட்டமுகாமையாளர் ஆகியோரும் அத்துடன் ஆசிரியர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

  தொழிற்பயிற்சிகளை நிறைவு செய்து தற்போது அதே துறையில் தொழில்களை மேற்கொள்ளும் மாணவர்கள் அடுத்த சந்ததியினருக்கு பயிற்சிநெறி மூலமாக பெற்ற நன்மைகள், அதன் மூலம் தமது வாழ்வாதாரத்தை பயனுள்ள வகையில் வடிவமைத்தமை போன்ற வழிகாட்டல் ரீதியான முக்கிய விடயங்களை,; அனுபவப் பகிர்வுகளாக பகிர்ந்து கொண்டதுடன்  அத்துடன் உதவித்தாதியர் பயிற்சிநெறியை நிறைவுசெய்த மாணவர்களால் தாதிய சத்தியப்பிரமானம் எடுத்துக்கொண்ட நிகழ்வும் இடம்பெற்றது