ஆரையம்பதி ஸ்ரீ பரமநயினார் வருடாந்த மகோற்சவத்தின் ஊர்வலம்

(சாரங்கன்) ஆரையம்பதி ஸ்ரீ பரமநயினார் (ஐயப்பன்) னின் வருடாந்த மகோற்சவத்தின் தேர்திருவிழா இன்று  20.06.2018 புதன் காலை வெகு சிறப்பாக இடம்பெற்றது. ஐயனார் சித்திரத்தேரில் ஆரோகணித்து ஆடி அசைந்து ஆரையம்பதி கிராமம் முழுவதும் விழாக்கோலமாக்கினார் .

பெரும்தொகையான அடியவர்கள் புடைசூழ ஆலயத்தில் இருந்து புறப்பட்ட ஐயனார் எல்லை வீதி ஊடாக பிரதான வீதியை அடைந்து அங்கிருந்து 4 ஆம் கட்டை சந்தியை அடைந்து அமரசிங்கம் வீதி ஊடாக ஊர்வீதியை அடைந்து பின்னர் ஆலயத்தை சென்றடைந்தார்.

தண்ணிர் பந்தல் அமைத்து நிறைகுடம் வைத்து ஐயனை வரவேற்று ஊரே விழாக்கோலம கொண்டிருந்த காட்சியை காணக்கூடியவாறு இருந்தது.