மட்டக்களப்பு மகாஜன கல்லூரியில் சென் ஜோன் அம்புலன்ஸ் படையின் இளைஞர் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் பயிற்சி செயலமர்வு


மட்டக்களப்பு மாவட்ட சென் ஜோன் அம்புலன்ஸ் படையின் இளைஞர் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் (YDP) கீழ் 09.06.2018, 10.06.2018 ஆகிய இரு தினங்களும் மட் /மகாஜன கல்லூரியில் பயிற்சிகள் வழங்கப்பட்டது.

இவ்வாறு பயிற்சி பெற்ற 86 பேர் மாவட்ட ஆணையாளர் திரு.ளு.சுந்தரராஜா அவர்களினால் லயன்ஸ் கோப்ரல் மற்றும் கோப்ரல் தரத்திற்கு உயர்த்தப்படவுள்ளனர்.

இதில் மட்டக்களப்பு மாநகர சபையினால் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் தீ அணைப்புப் படையினர் தீ அணைப்பு வாகனத்தைப் பயன்படுத்தி தீயை எவ்வாறு கட்டப்பாட்டுக்குள் கொண்டவருவது தொடர்பான விளக்கங்களை செய்முறை விளக்கங்களுடன் வழங்கினர். மேலும் தலைமைத்தவம், முதலுதவி, அனர்த்தமுகாமைத்துவும். அணிநடை. பயிற்சிகளும் வழங்கப்பட்டன.

இப் பயிற்சி செயலமர்வுக்கு இணைப்பாளர்களாக கோப் சுப்ரின்டன்ற் திரு. ச.வினோஜ் மற்றும் கோப் சுப்ரின்டன்ற் திரு. சு.கார்த்திகன் ஆகியோர் கடமையாற்றினர். அத்துடன் உதவி மாவட்ட ஆணையாளர்கள், ஏனைய உத்தியோகஸ்தர்கள் மற்றும் ஆசிரியர்களும் கலந்துகொண்டனர்.