சிறுமியை முச்சக்கரவண்டியில் ஏற்றிச்சென்று தள்ளி விட்ட இளைஞர்கள் கைது!


திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பத்து வயது சிறுமியொருவரை முச்சக்கர வண்டியொன்றில் ஏற்றிச் சென்று தள்ளி விட்ட இரு சந்தேக நபர்களை இம்மாதம் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் எம்.எச்.எம்.ஹம்ஸா (2) உத்தரவிட்டார்.

ஆத்திமோட்டை, எட்டாம் வட்டாரம், நிலாவெளி பகுதியைச் சேர்ந்த 20 மற்றும் 21 வயதுடைய இருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த இரண்டு சந்தேக நபர்களும் சிறுமி தனியார் வகுப்புக்குச் சென்று வீட்டுக்குச் சென்ற வேளையில் முச்சக்கர வண்டியில் ஏற்றிச் சென்று தள்ளி விட்டுள்ளதாக சந்தேக நபர்களுக்கெதிராக சிறுமியின் பெற்றோர்களினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கமைய வெள்ளிக்கிழமை (1) கைது செய்துள்ளதாக பொலிஸர் தெரிவிக்கின்றனர்.

பொலிஸார் சந்தேக நபர்களை திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.